KALMIA கால்மியர்
மூலம்: மலையில் விளையும் ஒரு வகை புதர் வகை நறுமண மலர்.
இதய வியாதிக்கு பயன்படும் மருந்துகளில் இதுவும் ஒன்று. இதில்14 குறி தான் முக்கியம். சோகம், பர, பரப்பு, எறிந்து விழுதல், பயம், நடுங்குதல், இவை எல்லாம் இதய வியாதியில் காணப்படும். இவர் பிடிவாதாமாக தான் பேசுவார், தான் பேசுவதும், மற்றவர்கள் பேசுவதும், பிடிக்காது இவருக்கு. இதயம் கெட்டுவிடும். தீயது நடக்க போகுது என்று பயப்படுவார்கள். தூக்கத்தில் வேலை செய்பவர்கள். உடல் பகுதியில் சுடுவது போல வலி. தோள்பட்டையிலிருந்து இடுப்புக்கும், பின் மண்டையில் இருந்து கை வலது கால், இடது கால், இடுப்பிலிருந்து குதி வரை இப்படி வலிகள் எல்லாமே கீழே இறங்குது என்பார்கள். இது முக்கிய குறி. இப்படி வலி கீழே இறங்குவதும், குத்துவதும் போன்ற வலிகள் ஏற்படும். காலை முதல் மாலை மூன்று மணி வரை வலியிருக்கும். மோடத்தில் வலி இருக்காது. வெயிலில் தான் வலி. இதன் முக்கிய குறி மேலிருந்து கீழே இறங்குதல். இதே இடத்தில் கீழிருந்து மேலே ஏறினாள் LED. மோட காலத்திலும், வெய்யில் காலத்திலும் வலினால் மயக்கமே வரும் HEP-S. எந்த வலியானாலும் இதயத்தில் வந்து முடியும். நெட்டு (சொடக்) போட்டாலும் கூட இதயத்தை போய் தாக்கும். இதனால் இதய நரம்பு பெருத்து வீங்கி 140 வரைக் கூட துடிப்பு துடிக்கும். அதிக துடிப்புக்கும், மிக குறைவான துடிப்புக்கும் இதுவே மருந்து. உடன் LIL-T, SPIG சமமாக வரும். பார்க்கனும். அசைவினால் அதிகம். படுத்துக் கொண்டால் சுகம். நகர முடியாது. ஓய்வில் சுகம். வலி வயிற்றிலிருந்து மேலே வரும். இதயத்திலிருந்து கை, தோள்பட்டைக்கு வலி போகும். (PECULIAR). சிபிலிஸ் கண்டிஷன் மாதிரி இரவில் வலி அதிகமாகும். நரம்பு (பாதைகளின்) வலிகளுக்கு, இதய துடிப்பு குறைவு. அதிகத்திற்கு இது போன்றவைகளுக்கு இது நல்ல மருந்து. இதய துடிப்பு சில சமயம் 40க்கு கீழேயும், 140 க்க மேலேயும் காணப்படும். உடன் LIL- T, SPIG.