KREOSOTUM க்ரியோசோட்டம்

மூலம்: கடற்கரையில் மட்டும் விளையும் ஒரு வகை மரகட்டை ரஸம்.

இம் மருந்தின் முக்கிய குறி என்னவென்றால் காயம், தழும்பு, அழுகும் புண். புண்ணில், புற்றில், சொத்தை விழுந்த இடம் என்று பல், வாய், பிறப்பு உறுப்பு, ஆண், பெண் உறுப்பு, ஆஸனம், மூக்கு எங்கும் இரத்தம் வடியலாம். அது கருப்பு நிறமாக இருக்கும். குறிப்பாக பெண்ணுக்குத் தோன்றும் வெள்ளைப்பாடும், மாதவிலக்கும் கூட தார் எண்ணை மாதிரி போகுதுங்க என்பார்கள். மற்றும் இவரது பற்களை பார்த்தால் நல்ல உயர்ந்த பற்பசையிலும் நல்ல பிரஷ் கொண்டு பல்லை விலக்கி கொண்டே இருப்பவர்களாகவே இருப்பார்கள். ஆனால் பல்லை பார்த்தால் சந்தில் கருப்பு படிவு காணப்படும் (அ) ஊத்தை கருப்பாகவே இருக்கும். அதாவது அடுப்பு கரியில் பல்லை விளக்கிய பின்பு எச்சில் துப்பியதும் பாருங்கள். பல சந்தில் கருப்பு இருக்குமே அப்படி இருக்கும். இவர்களுக்கு இந்த ஒரு குறியை வைத்து இம் மருந்தை தந்து விட்டால் போதும். மற்ற நோய்கள் தணிந்து (அ) மாறிக் கொண்டு வரும். வெற்றிலை, பாக்கு போட்ட மாதிரி பல் சந்தில் சிவப்பு படிந்தால், பல்லில் சொத்தை விழுந்து கூட கருப்பு தெரியும், கருப்பு தான் இதன் குறி. முற்றிய சர்க்கரை வியாதி, குஷ்ட நோயில் பாதத்தில் சொத்தை விழும். அதற்கு இது சிறந்த மருந்து. இம் மருந்துக்குரிய சிறுவர்கள், வயதானவர்கள் போல் காய்ந்துக் காணப்படுவார்கள். கட்டி கட்டியாக சரும நோய் அதில் செதில்கள் உதிரும். கோபமாகவே இருக்கும் குழந்தைகள் முகம் வெளுத்தும், உடல் மீது புளித்த நாற்றமும் அடிக்கும். சிறு வயது பெண்கள் உயரமாக வளர்ந்திருப்பார்கள் மற்றும் வயதானவர்கள் போல தோற்றமளிப்பார்கள். படுத்துக் கொண்டால் மாதவிலக்கு நின்று விடும். எழுந்து நடந்துக் கொண்டிருந்தால் தான் மாத விலக்கு வரும். மாத விலக்கும் இரத்தம் எப்போதும் காரத்தன்மையும், பெண் மாத விலக்கின் வெள்ளைப்பாட்டுக்காக போடப்பட்ட (துணியில்) ஜட்டியில் துவைத்த பின்பு அங்கு கருப்பு என்றால் இது தான் மருந்து. அடிப்பட்ட இடத்தில் கருப்பு இரத்தம் வந்தால் இது நல்ல மருந்து. ஜில்லுன்னு சாப்பிட்டால் வயிற்றில் புற்று நோயே வந்து விடும். ஜிலு, ஜிலுப்பான காற்றிலோ, தண்ணிலோ ஈரப்பருவத்தில் தொல்லை. நிற்கும் போதும் மாதவிலக்கு வரும். பல் வியாதிகள் இருக்கும். வயிற்றில் புற்று நோய் இருக்கும் போது சூடாக சாப்பிட்டால் சுகம். குளிர்ச்சி தொல்லை உட்கார்ந்தால் வெள்ளைபாடு நின்ற விடும். வெது வெதுப்பாகவும், தும்பிக் கொண்டே இருந்தாலும் சுகம்.