KALI-BICHROMICUM காலி பைக்ரோமியம்

மூலம்: பொட்டாசியத்தின் ஒரு பிரிவு.

இது ஓர் எளிமையான அதிகப்படியாக தேவைப்படும் மருந்து ஆகும். ஜனங்கள் மீது சந்தேகம், பயம் அதனால் வெறுப்பு, சந்தேகத்தாலும், பயத்தாலும் வெறுப்பு தோன்றினால் இது தான் மருந்து. மற்றும் இவர்களுக்கு கடுமையானது என்னவென்றால் இவர்களுக்கு தோன்றும் கழிவுப்பொருள்கள் எல்லாம் சளி, சீழ், மாதவிலக்கு போன்றவை அப்படியே கோந்து மாதிரி, நாரு மாதிரி வரும். இது தான் இம் மருந்தின் உடல் ரிதியான முக்கிய குறி. ஒரு குறிப்பிட்ட இடத்தை தொட்டு காட்டி ஒரு இஞ்சுக்கு மட்டும் வலி என்றால், கொஞ்சம் அகலமாக வலி, வலியற்ற தன்மை என்று மாறி, மாறி வந்தால் PULS. இவர்கள் துப்பும், கோழை சளியானது, பிசின் மாதிரி தரையில் அப்பிக் கொள்ளும். தண்ணீர் ஊற்றினாலும் போகாது, தேய்த்து எடுக்க வேண்டும். இரும்பி கோழையை துப்பியதும், தரைக்கும், வாய்க்கும் ஒரு நூல் போல நீண்டு இருக்கும். இதே மாதிரி வாந்தியில், எச்சில், மூக்கு சளியில் வெள்ளைப்பாட்டில், கழிவுகள் விழுந்த பிறகும் நூல் மாதிரி நீண்டுஇருக்கும். அது வெள்ளை நூல் மாதிரி இருக்கும். (இதே இடத்தில் மஞ்சள் நூல் மாதிரி இருந்தால் HYDRO.) மன குறியும், சொல்லுவார். எனக்கு இந்த நோய், துன்பம் வலி நீடித்து இருக்குதுங்க என்னை விடவே மாட்டிங்குதுங்க, சித்தரவதை செய்கிற மாதிரி இருக்குதுங்க என்பார். வெறும் கறியே சாப்பிடுவார். பின்பு வயிற்றுவலி என்பார் FERR.

சிறு நாக்கின் அடியில் ஏதோ ஓர் உரோமம் இருப்பது பேன்ற உணர்வும், உள் நாக்கு பை போன்று பெருத்து படுத்திருப்பது போல இருக்கும். மூக்கு அடைப்பின் போது சளி கட்டி, கட்டியாக குண்டு மாதிரி வந்தால் சுகம். எனக்கு மருந்து வைத்து விடுவார்களோ, கொன்று விடுவார்களோ, என்று மனித குலத்தின் மீது வெறுப்பு, தப்பு செய்த மாதிரி எண்ணம். ஆழமான குழிப்புண், விரல் தொடும் அளவு மட்டும் மருத்து போச்சிங்க என்பார். இது குஷ்ட நோயில் இதை பார்த்து கொள்ளவும். மூட்டுக்கு, மூட்டு அரை இஞ்சி அளவு தாவும் வலி. அகலமாக இங்கு தாவினால் BELL, PULS.மூட்டுவலியும், சீதபேதியும், மாறி, மாறி தோன்றும். T.B. சளியானது இரத்த வாசம் அடிக்குதுங்க, சளி துப்பினால் சாம்பல் கலர் இருக்கும் என்றால் இது தான் மருந்து. தலைவலிக்கு முன் கண் மங்கள், தலைவலி அதிகமானால் பார்வை தெரியும்.