ALOE – SOCOTRINA ஆலோ சகோட்ரினர் ஆலோ

(நீர் வாழை) செடியின் கோந்து.

இது முக்கியமாக ஆஸனவாயில் வேலை செய்யும் நல்ல மருந்து. அதாவது மலம் ஆனது தண்ணியாட்டமோ, பேதியாட்டமோ, போனால் இந்த குறி மேலோங்கி நிற்கும். காற்று பிரியும் போது மலம் கொஞ்சம் ஒழிகிவிடும். கேட்டால் காற்று தாங்க பிரிகிறது என்பார்கள். மலம் வந்தது தெரியலை என்பார்கள். காற்று பிரியும் போது மலம் வருவது தெரியாவிட்டால் இது தான் ஒரே மருந்து. இது சிறுவர்களிடமும், நோயாளிகளிடமும், வயதானவர்களிடமும் தெரியும். (காலையில் எழுந்தவுடன் மலம் கழிய அவசரமாக ஓடினால் SULPHUR. காற்றோடு மலமும் பீச்சுன்னு அடித்தால் PODO. மலம் மட்டும் பீச்சுன்னு அடித்தால் CROTON - TIG. மாவு கரைத்த மாதிரி புளுக்கை, புளுக்கையா மலம் வரும் அது கூட தெரியாது APIS. வயிறை அழுத்திப்பிடித்துக் கொண்டு ஓடினால் COLOCYNTH. குழந்தைகள், சிறுவர்கள், மற்றும் வயதானவர்கள் நோயாளிகள் அனைவருக்கும் நோய் தாக்கிய பின்பு இப்படி மலக்காற்று விடும் போது அதனுடன்மலமும் வந்து விட்டால் மலம் வருவது தெரியாவிட்டால் இது தான் மருந்து ALOE. தனக்கு காற்றுடன் மலம் வந்து விட்டால் அதை எண்ணி எண்ணி அறிவே மலுங்கி விடும்.