ZINCUM – METTALICUM ஜின்கம் மெட்டாலிக்கம்
துத்தநாகம் என்ற உலோகம்.
உட்கார்ந்து இருக்கும் போது முழங்கால் கீழ் தானாகவே காலை ஆட்டிக் கொண்டே இருப்பார்கள். மமதையில் (ஆணவத்தில இப்படி ஆட்டினால் PLAT.) ஆனால் இவருக்கு மூளையில் ஏற்பட்ட பக்க வாதம் தான் இப்படி ஆட்ட காரணம் ஆகும். இவர்கள் தொழிலாளியை வெறுப்பார்கள். காலையில் சிரிப்பு. மாலையில் வருத்தம். பல் வலியினால் வலிப்பு. வெளுத்த முகம். உடம்பு பகுதியில் சூடு இருக்காது. கண்ணை உருட்டிக் கொண்டும், பற்களை நகத்தில் நோண்டிக் கொண்டும் இருப்பார்கள். ஆண், பெண் உறுப்புகளிலோ, புறப்பாடுகளை அடக்கிய பிறகும், இயற்கையாக வெள்ளைப்பாடு, மாதவிலக்கை நிறுத்திய பிறகும், மூளை, முதுகு தண்டும், தாக்கப்பட்டு தலைவலிக்கு பிறகு வலிப்பு தோன்றி விடும். தடுப்பு மருந்துகளை கொடுத்து மேலே கண்ட கஷ்டங்களை தடுத்த பிறகு, மூளையில் பக்க வாதம் ஏற்பட்டு கால்களை தானாக ஆட்டிக் கொண்டிருப்பார். இது முக்கிய குறி. இது மமதை (ஆணவம்) அல்ல. மமதையில் ஆட்டுவது ஸோரா விஷம். இது தடுக்கப்பட்ட மருந்தினாலும், நோயினாலும் இப்படி பலஹீனம் ஆகி விடுவார். இதுவும் ஒரு வகை பக்க வாதமே.