NUX - VOMICA நக்ஸ் வாமிகர்

எட்டிக்காய்.

இம்மருந்துக்குரியவர்களது மனநிலை தனக்கு கீழ் வேலை செய்பவர்கள் சரியா வேலை செய்யணும், வெச்ச பொருள், வெச்ச இடத்தில் இருக்கணும். சேர் கொஞ்சம் கோணையாக இருந்தால் கூட எட்டி உதைப்பான். எதாவது தவறாக எழுந்திருந்தால் அந்தப் பேப்ரைக் கசக்கி தூக்கி எறிந்து விடுவார். இதே மாதிரி இருந்தால் ARS. தாங்கிக் கொள்வான். இவ்வளவு மோசம் கிடையாது. எந்த வேலையையும், எவ்வளவு நேரம் செய்தாலும், இவர்களுக்கு திருப்தியே கிடையாது. சாவேன் என்று மெரட்டிக் கூறுவார்கள். பூ, பத்தி, சென்ட், வெளிக்காற்று, பேன் காற்று போன்றவைகளையும், வாசனையும் இவர்களால் தாங்க முடியாது. சிறிது கூட சேராது தொல்லை தரும். சிறுநீர் மலம் போன்றவை தான் தொல்லைத் தரும். மலம் பாதியிலேயே நின்று விடும். மலக்குடலில் பாதியிலே நின்று விடும். இதனால் தான் மலம் வருது என்ற உணர்வு. அதனால் மலம் அடிக்கடி போவான். பாதியில் நிற்பதால். மலம், பேதி, சீதக்கட்டு கழிந்தால் சுகம் என்பார்கள். மாத விலக்கு நீடித்தும், இடைவெளி குறைவாகவும் இருக்கும். நிம்மதி தேடுவான். இவ்வளவு வேலையும் செய்யதப் பிறகு, போலிசில் பிடித்துக் கொள்வார்களோ என்று அதிக உணர்ச்சி வசப்பட்டால், அனைவரிடமும், இவன் வேலை வாங்குவான். ஆனால் இவன் செய்ய மாட்டான். மற்றவரை அமைதியாக இருக்க சொல்வான். ஆனால் இவன் கத்திக் கொண்டே இருப்பான். காப்பி சாப்பிட்டால் தொல்லை. எனக்கு நிம்மதி வேண்டும் என்பான். மற்றவர் தப்பு செய்தால் பொருத்து கொள்ள மாட்டான். அதிகாரம் செய்யும் ஆபிஸர், உத்தரவு போட்டு பேசுவான். சேராத உணவு, சித்த மருந்துகள், மற்ற மருந்துகள் சாப்பிட்டு வயிறு கோளாறு ஏற்பட்டால் அதை முறிக்கப் பயன்படும். குளிரின் போது கையை சுருட்டி போர்வைக்குள் வைப்பார். (வயிறு வலினால் வாந்தியில் மலமே வந்து விடும். PLB என்ற மருந்தும் பொருந்தும்.) பிறர் சிறிய தப்பு செய்தாலும் பொருக்க மாட்டான். (மன்னிக்கவே மாட்டான் ACID – NITE) கேள்வி கேட்டால் பயம், உணர்ச்சி வசப்பட்டு கூறுவார்.