LYSSIN லைசின்
மூலம்: வெறி நாயின் உமிழ்நீர்.
இவர்களுக்கு தண்ணீரைப் பார்த்தால் மிகவும் பயம். ஆறு, ஏரி, நீர்வீழ்ச்சி போன்ற நீர்களைக் கண்டு பயம். வெறி பிடித்த மாதிரி பயம். (இதே இடத்தில் தண்ணீரின் பளபளப்பை கண்டு பயந்தால் STRAM.) இவர்கள் தண்ணி கூட எடுக்க மாட்டார்கள். கேட்டால் சீலையில் தண்ணிபட்டால் வெறி வந்துடுங்க என்பார். (தண்ணி எடுக்க வெறுப்பு என்றால் SEP.)கண்ணாடி பளபளப்பை பார்த்தால் வலிப்பு வந்து விடும். கணவன் சும்மா பேசினாலும், வேறு யாராவது பேசிக்கொண்டிருந்தாலும், தன்னையே குற்றம் சொன்னாலும், அவர்களை அடித்து நொறுக்கி விடலாமான்னு வெறி வந்து விடும். இடுப்பில் இருக்கும் குழந்தை அழுதால் காலை இரண்டை பிடித்து பாறை மேலே அடித்து நொறுக்கி விடலாமான்னு வெறி வந்துடுதுங்க என்பார். வீட்டில் இருக்கும் பொருள் எல்லாம் வேறு யாருடையது மாதிரி தெரியும். கெட்ட செய்தி வரப்போகுது என்று எப்பவும் எதிர்பார்த்து கொண்டே இருப்பார்கள். வெளியே போனால் விபத்து வந்து விடும் என்று போக மாட்டார். சின்ன கோபம் வந்தால் கூட அவர்களை அடித்து நொறுக்கலாமா? என்ற எண்ணம் வரும். பயங்கரமாக கோபம் வருது என்று பெண் கூறுவாள். அப்போது என்னமா செய்து என்று கேட்டால் அடித்து நொறுக்கி தூள், தூள் ஆக்கி விடலாம் என்று வெறி வருதுங்க என்றும், கடித்து கொதறி விடலாமா என்றும் இருக்குதுங்க என்பாள். கணவனோ, மனைவியோ வெறிதனமாக திட்டிக் கொண்டால் இது தான் மருந்து. எதிரியை வெட்ட வெறி வந்தால் HEP. தன்னையே வெட்டிக் கொள்ள வெறி வந்தால் ALUM. மனைவி சொல்வாள். என் கணவனுக்கு கோபம் வந்தால் வெறி நாயாட்டம் இருக்கிறாங்க, கணவர் சொல்வார், இவளுக்கு கோபம் வந்து விட்டால் வெறி நாயாட்டம் குழைக்கிறா என்று சொல்லுவார். வெறி, வெறி என்ற சொல் வந்து விட்டால் இது தான் மருந்து. ஆட்டுக்கறி சேராவிட்டாலும் ஒரே மருந்து இது தான். சண்டையில் வெறி பிடித்த மாதிரி நடந்து கொள்ளுவார். அரசு மருத்துவமனையில் நாய் கடிக்கு, தொப்புளைச்; சுற்றி ஊசி போடுவார்கள். ஆனால் அந்த மருந்தே பின்பு தொல்லை தரும். அந்த தொல்லையை முறிக்கவும், நாய் கடித்தால் அந்த விஷத்தை முறிக்கவும், இது பயன்படுகிறது. குறிப்பு:- அலோபதி மருத்துவத்தில் நாயின் இரத்தத்தின் சீரத்தை எடுத்து ஊசி மருந்துகளாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதை அரசு மருத்துவமனைகளில் போடப்படுகிறது. இருப்பினும் அதில் பின் விளைவுகள் வருகிறது. இதில் பின் விளைவு இல்லாமல் குணப்படுத்தி விடும். குளிக்க பயம்.