IPECACUANHA இப்பிக்கா
மூலம்: உனர்இபிகாக் என்ற மேலை நாட்டு மரத்தின் வேர்.
வாந்திக்கு முக்கிய மருந்து இது. பலவிதமான வாந்தி எடுப்பார்கள். வாந்திக்கு என்று சில மருந்துகள் இருக்கிறது. ஆனால் இம் மருந்தின் குணம் என்னவென்றால் வாந்தி எடுத்துவிட்டு வாயை கழுவிக் கொண்டு சாப்பிடுவார்கள். நாக்கை பார்த்தால் சுத்தமாகவே இருக்கும். குளிர் காய்ச்சலின் போது சொல்வார். வெய்யிலில் நின்றால் குளிர் அதிகமாகி விட்டது என்பார். இது தான் இந்த நோயின் முக்கிய குறி. இவர்களுக்கு பல்லில் வரும் இரத்தமோ, காயத்தில் இருந்து வரும் இரத்தமோ. மாதவிலக்கின் ரத்தமோ, மானி, ஆசனவாய், யோனியிலிருந்து வரும் இரத்தமோ இப்படி உடலில் எங்கிருந்து இரத்தம் வந்தாலும் அது சுத்த சிவப்பாக தண்ணி மாதிரி நிறைய போகுது என்பார். தீட்டு சுத்த இரத்தமா தண்ணியாட்டம் ஊற்றுகிறது என்று பெண் கூறுவாள். குமட்டலுக்கும், வாந்திக்கும் COLCH, COCC. மருந்தாகும். ஆனால் இது வாந்திக்கு மட்டும் தான் இந்த மருந்து. கர்ப கால வாந்திக்கும் இது பொருந்தும். அதிகமாக குணைன் மருந்து கொடுத்து, கெடுக்கப்பட்ட பின்பும், கக்குவான் இரும்பலில் இழுப்பு அதிகமாகி, வாந்தியானது சுத்த இரத்தமாக எடுப்பார். இப்படி மூக்கிலும் வரும். வெளியேறும்; இரத்தமானது சுத்த சிவப்பு இரத்தமாக வரும். இது முக்கிய குறி. திறந்த வெளிக் காற்றில் வியாதி தணிந்து போய் விடுகிறது என்பார். குறிப்பு் உறவாக, முறிவாக வலியின் போது இரத்தப் போக்கின் போது, இப்படி பல நிலைகளை கூறி தக்க மருந்துகளை தெளிவான, சுருக்கமான, விளக்கங்களை மத்தூரில் பார்த்துக் கொள்ளவும்.