ECHINACEA - ANGUSTIFOLIA எக்னீஸா அங்கஸ்ட்போலியா

மூலம்: செடி வகை.

விஷ பூச்சிகடிகள் நண்டுவாக்கிளி, தேள், பூரான் போன்ற விஷ கடிகளுக்கும், உணவு பொருளில் எலி பாஷனம், மற்ற பூச்சி கொல்லி மருந்துகள் போன்ற நஞ்சு தன்மை உடலில் ஏறிவிட்டால் இந்த மருந்தின் தாய் திரவத்தை வெண்ணீரில் 10 சொட்டுகள் கலந்து அடிக்கடி கொடுத்து கொண்டே வரணும். அப்படி செய்தால் விஷம் முழுமையாக நீங்கி விடும். நீங்கும் வரை கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். (இது நாய்கடிகளின் விஷம், நாக பாம்புகளின் விஷம், வீரியன் பாம்புக்கடிகளுக்கு பாம்பு வகைகளின் கடி விஷத்திற்கும். பெரிய விஷத்திற்கெல்லாம் இது பொருந்தாது.) இதே போல் தற்கொலை செய்து கொள்ள விரும்பி விஷம் குடித்தவர்களுக்கு இது பொருந்தாது. சிறு விஷகடிகளுக்கு பொருந்தும். பெரிய விஷங்களுக்கு தக்க குறி பார்த்து மருந்து தரணும். தற்கொலை செய்து கொள்ள குடித்த மருந்தை முதலில் வாந்தியாகவோ, பேதியாகவோ எடுத்த பிறகு குறியை பார்த்து மருந்து தரணும். குறி தெரியவில்லை என்றால் அது வரை மட்டும் இதை பத்து நிமிஷத்துக்கு, ஐந்து நிமிஷத்துக்கு ஒரு முறை நோயின் தீவிரத்துக்கு தக்கவாறு 10 மில்லி வெண்ணீரில் 10 சொட்டு இந்த மருந்தை விட்டு குறி தெரியும் வரை கொடுத்து கொண்டே இருக்கணும். தூக்கு போட்டு பாதியில் இறக்கி விட்டால் (உயிரும் போகாது, ஆரோக்கியம் இல்லாத ஒரு மயக்க நிலைக்கு) CARB-V, CUPER, LACH, NUX-V, SPONG. இம் மருந்தின் குறிகள் தோன்றலாம். தக்க மருந்து கொடுத்தால் அவர்களை காப்பாற்றி விடலாம்.

EUPATORIUM – PERFOLIATUM – இப்படோரியம் பெர்போலியம்

எலும்பு மூட்டு.

இவர்களுக்கு தோன்றும் வாத வலியானது (அ) எந்த வலியானாலும் எப்படி இருக்கும் என்றால், கை, கால், மூட்டு எல்லாம் கழண்டு போகிற மாதிரி வலிக்குது என்பார். அவ்வளவு வலிங்க (துணி கூட அங்கு பட முடியலிங்க என்றால் ARN. மூட்டில் வைத்து நசுக்கினால் (அ) ஏறி மிதித்தால் நன்றாக இருக்கிறது என்றால் BRY.) வலியுள்ள மூட்டை இப்படியும், அப்படியும் முறுக்கி கொண்டும், நெட்டு எடுத்து கிட்டே இருந்தால் சுகம் என்றால் RHUST. இந்த வலினால் மனசு இருப்பு கொள்ளவில்லை டென்ஷன் என்றால் ARS.. இது எலும்பு இரணம் மாதிரி வலி. வலி திடீர்ன்னு வருது, திடீர்ன்னு மறையுது. குறிப்பிட்ட நேரமானால் வலி வருது, அடிப்பட்டு நசுக்கிய மாதிரி வலி, நெஞ்சு, பின் மண்டை, எலும்பு, நுரையீரல், வயிறு போன்ற பகுதிகளில் தாக்கும். ஆனால் இதன் முக்கிய ஒரே குறி எலும்பு மூட்டே கழண்டு போகிற மாதிரி வலிக்குது என்பார். கையோ, காலோ, இடுப்போ, எந்த மூட்டாக இருந்தாலும் இப்படி சொன்னால் இது தான் ஒரே மருந்து.