DULCAMARA டல்கமரர்

மூலம்: இனிப்பும், கசப்பும் கலந்த கலவை.

இவர்களுக்கு குளிர்காலத்தின் துவக்கத்தின் போதே மூட்டு வலி, பேதி, சளிபிடிப்பு என்று பல தொல்லைகள் கூறுவார்கள். அதே போல் வெய்யில் கால துவக்கத்தின் போதும், சூடு பிடிச்சிகிடுச்சி, கண் வலிக்குது, வயிற்றால போகுது என்று கூறுவார்கள். எனக்கு பாருங்க எந்த பருவம் ஆரம்பித்தாலும், தொல்லைதாங்க என்பார். ஏசி தியேட்டர் உள்ளே போனாலும் தொல்லைங்க, வெய்யிலில் போனாலும் மேலே கண்ட நோய்களை கூறி இதனால் இந்த நோய் வந்து விட்டது என்பார். கோபமே இல்லாமல் கசா, முசான்னு பேசுவார்கள். அருகில் பெண்கள், பெரியவர்கள் இருக்கிறார்களே என்று கூட பார்க்காமல், வெட்கம் இல்லாமல் கொச்சை, கொச்சையாக, பேசினால் HYOS.) நள்ளிரவில் தூக்கம் கெடுவதால் கவலை. மாலை நேரத்தில் ஜிலு, ஜிலுப்பு காற்றினால் தூக்கம் கெட்டாலும் கவலை, பொறாமை, இந்த மாதிரி எதுவும் இல்லாமல் கற்பனையாக அழுவார். கற்பனையாக மூட்டை பூச்சி, எறும்பு போன்றவற்றை தேடுவார்கள். குளிர்காலத்தில் தொண்டை வறட்சிக்கு ARS, BRY. கொடுத்து சரியாகா விட்டால் இது ஒன்று தான் பெரிய மருந்து. பேசும் போதும், எழுதும் போதும் வார்த்தைகளை சிந்திப்பார். கசா, முசான்னு பேசுவார். உடன் கோபம் இருக்கும்.