DIPHERINUM டிப்தேரினம்

மூலம்: டிப்தேறிய கட்டி

டிப்தேறிய நோய் என்பது தமிழில் தொண்டை அடைப்பான் என்று பெயர். இது குழந்தைகளையே தாக்கி மூச்சு திணறி மரணத்தை ஏற்படுத்தி விடும். வாயைப் பார்த்தால் (உள்ளே) வெள்ளை நிறத்தில் பாலாடை மாதிரி ஜவ்வு படுதா போட்ட மாதிரி தொண்டையில் இருக்கும். இதனால் தான் குழந்தை மூச்சு திணறி இறந்து விடுகிறது. இந்த வியாதி பயங்கரமான வகையை சார்ந்தது. இதன் தோற்றம் எப்படி இருக்கும் என்றால் புத்தி மந்தமாகவும், முட்டாள் தனமாகவும், கேணம் பிடித்த மாதிரி பேசும், பார்க்கும், அப்போது மூச்சு விட திணறும் போது மூச்சு காற்று நாற்றம் வீசும். உடம்பு சூடு ஏறும், இறங்கும். ஒரு கட்டுப்பாட்டில் இருக்காது. உடம்பு ஆங்காங்கே குளிர்ந்து காணப்படும். (வட்ட, வட்டமாக குளிர்ந்து காணப்படும்.) அதே போல் ஆங்காங்கே இளைப்பு (அ) பார்வை மங்கி, மந்தமாக, பரிதாபமாக மரணப்பாதையின் வாயில் செல்வதும். சிசுவானது எந்த நேரமும் மரணம் நேரலாம் என்ற நிலையில் அப்படியே செயல் இழந்து படுத்து கிடக்கும். பக்க வாதம் இருக்கும் போதும் இந் நோய் தோன்றலாம். இந் நிலையானது திடீர்ன்னு கொள்ளை நோயாக கூட பரவலாம். கொள்ளை நோய் தோன்றிருக்கும் காலங்களில் சற்று கவனமாகப் பார்த்தால் எந்த வகை கொள்ளை நோயாக இருந்தாலும் தக்க மருந்தை தேர்வு செய்து தர முடியும். கொள்ளை நோயில் இறக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையை பெரும் பகுதியை குறைக்க முடியும். இதனுடைய அதிகரிப்பு எதனால், என்றால் குளிர்ச்சியின் போதும், படுத்திருக்கும் போதும், பால் குடித்தாலும், தொண்டைக்கு வேலை தரும் போதும், தொல்லைகள் அதிகமாகி இரத்தம் கெட்டு போயிடும். இது எதனாலும் தணிவும், சுகமும் இருக்காது. ஆகவே இதன் அவசரத்தையும், ஆபத்தையும் உணர்ந்து கொள்ளனும். ஆகவே மத்தூர் குறிப்பில் இதனுடன் என்ன, என்ன நோய் வரும். அதற்கு தக்க மருந்துகள் என்னென்ன என்பதை மிக நுட்பமாக எழுதி வைத்துள்ளார். அதனைப் பார்த்து கொள்ளனும்.

DROSERA – ROTUNDIFOLIA – டிரோசிரியா ரோட்டன்டிப்பாலியா

சூரிய காந்தி சருகு.

குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும், மிக, மிக கடுமையான கக்குவான், இரும்பல், இழப்பும், இசிவும், பயங்கரமாக இருக்கும். மறுகுறி பாய்ந்து விட்டால் மூன்று மாதங்கள் கூட நீடிக்கும். கக்குவானுக்கு பிறகு தோன்றும் சின்னம்மை, பலவகை சரும நோய்கள், காச நோய், கண்நோய், தொண்டை நோய், குரல் கம்மி விடுதல் ஆங்காங்கே உள்ள கோளங்கள் வீங்கி கல் மாதிரி, எலும்பு சிதைவு ஏற்பட்டு, T.B. ஆகவும் மாறலாம். இரும்பும் போது, தொண்டையில் குறு, குறுத்த உணர்ச்சி, குதிரை கனைக்கிற மாதிரி இரும்பல் சத்தம் வரும், தொண்டையில் ஆடை போர்த்திய மாதிரி (பார்த்தால்) தெரியும். காக்கை வலிப்பும் தொற்றும். கை, கால் உதறும் போது வலிப்புகாரனாட்டம் உதறுவார். இந்த காலத்தில் பல குழந்தைகள் இறந்து விடுகின்றன. நாம் இந்த மருந்தை கொடுத்தால் அதன் கொடுமையான வேகத்தையும், மரணத்தையும் தடுத்து விடுலாம். ஆனாலும் கக்குவான் இரும்பலின் காலக்கெடு ஒன்றை மாதம் (1 ½ ) இருந்தே தீரும். இந்த அற்புதமான ஹோமியோபதி மருத்துவத்தில் மருந்து கொடுத்தாலும், கூட வேகத்தையும், மரணத்தையும் தவிர்க்கலாம். அதன் காலக்கெடு என்ற இயற்கை நியமங்களை மாற்ற இயலாது. அதாவது வேகமாகவும், விரைவாகவும் மரணம் வரும். மூளை காய்ச்சலுக்கு இங்கிலிஸ் மருத்துவத்தில் மருந்து கொடுத்தால், மூளை காய்ச்சல் குணமாகும். பிறகு மனம் மந்தப்பட்டு முட்டாள் (அ) கேணமும் பிடித்து விடும். ஹோமியோபதி முறைப்படி இந்நிலையில் கொடுத்தால், கொஞ்ச நேரம் ஜன்னி இழுக்கும். பிறகு கை, கால், செயல் அற்று போய்விடும். இப்பொழுது மூளைக்காய்ச்சல் சுத்தமாக சரியாகிவிடும். பிறகு சரும நோய்கள் தோன்றி பிறகு, படி, படியாக சில நாட்களில் இதுவும் குணமாகிவிடும் இது தான் இயற்கை நியதி. குறிப்பு:- அவர்கள் அவசரப்பட்டால் அவர்களை நாம் அனுப்பி விடனும். அவர்கள் அலோபதி மருத்துவத்துக்கு சென்று மரணம் அடைந்து விட்டால், அவர்கள் நமக்கு உறவினரோ, நெருங்கிய நண்பரோ, என்றால் இரண்டு சொட்டு கண்ணீர் விட்டு நமது கடனை முடித்து கொள்ளனும். இப்படி நமக்கு உபதேசம் செய்து நமது கடனை தீர்த்து கொள்ளனும். அந்த ஆன்மாவுக்கு நாம் இப்பொழுது வேற எதுவும் செய்ய முடியாது என்று Dr. HANNIMAN.கூறுகிறார். அதிகரிப்பு - பாடினால், குடிச்சால், சிரிச்சால், தரையில் படுத்தால் தொல்லைங்க என்பார்கள். கஷ்டமும் ஆகிவிடும். நடந்தால், அசைந்தால், திறந்தவெளி காற்றில் இருந்தால், சொறிந்தால் சுகம் என்பார்.