DIOSCOREA டையஸ்கோரியர்

மூலம்: சர்க்கரை வள்ளி கிழங்கு செடியின் சருகு.

இம் மருந்து எல்லா வலிகளுக்கும் பொருந்தும் என்றாலும் அடிவயிற்றில் வெட்டுவது போல மிக, மிக கடுமையான வலிகளுக்கு மருந்துகளின் வரிசையில் முதலில் வருகிறது. மலக் காற்று நிரம்பி உப்பிசத்தால் வலிக்கும். சிறிதும் குனிய முடியாது. அதனால் வயிற்றை நிமிர்த்திக்கொண்டு எக்கி, எக்கி வாந்தி எடுப்பார். குமட்டுவார். கஷ்டத்தில நிமிர்ந்து உட்காருதல், நடத்தல், நிற்பதில் வலி தணியும், சிறுநீரகத்தில் கல் அதனால் வலி. அப்ப காரி, காரி எச்சி துப்புவார். வலதுபுற இடுப்பு நரம்பில் வலி. இதய நரம்பில் வலி. மலக் காற்று போனால் சுகம். இது ஆண்களுக்கு பொருந்தும். தூக்கத்தில் விந்து வேகமாக பீச்சி அடித்து விடும். இதனால் உரிய நேரத்தில் பயன்பட மாட்டார். குனிந்தாலும், டீ குடித்தாலும், நடந்த பிறகு, இரவு 2 மணிக்கு, அதிகாலை நேரம். மேலே கண்டவைகளினால் தொல்லைகள் அதிகம் ஆகும். நடந்தால், திறந்த வெளிக் காற்றில் பிரயாணம் செய்தால், சவாரி செய்தால், அழுத்தி விட்டால், நிமிர்ந்தால், சுகமாக இருக்கிறது. வலியும் குறைகிறது என்பார். இம் மருந்தின் விசேஷ குறி என்னவென்றால் வயிற்றை அப்படியே நிமிர்த்தி வில் மாதிரி பின்புறம் வளைந்தால் வலி தணிந்து போய்விடும். (இதே இடத்தில் எதிராக முன்புறம் குனிந்து வயிற்றை அழுத்தினால் சுகம் என்றால் COLOCY.) வலியாகப்பட்டது திடீர்ன்னு வரும். பயங்கரமாகவும் இருக்கும். மனகுறி, எனக்கு எல்லாமே கெட்ட பெயர் வர மாதிரியே இருக்குது என்பார். மற்ற மருந்துகளை போலவே இம் மருந்தும் ஆணுக்கும், பெண்ணுக்கும், அங்குள்ள உறுப்புகளிலும், மற்ற முக்கிய உறுப்புகளிலும், மிக, மிக கடுமையாக திடீர் என்று வலி ஏற்படுகிறது என்பார்கள். இதன் விசேஷ குறி என்னவென்றால் வலியுள்ள பகுதியை நிமிர்த்தி பிடிப்பார்கள். சுகத்துக்காக வயிற்றை நிமிர்த்தி பின்புறம் ஸ்டைலாகவும், பெண் மார்பை நிமிர்த்தி பின்புறமாக முதுகை வளைத்து போஸ் தரும் பெண்கள், நடிகைகள், பைத்தியத்துக்கும் இது பொருந்தும். வியாதியின் போதும் இப்படி செய்தால் பொருந்தும். இதை மத்தூரில் பார்த்து கொள்ளனும்.