CHINA – OFFICINALIS சைனா அ்பிசினாலிஸ்

மூலம்: கொய்னா மரப்பட்டையின் சாறு.

குளிர் காய்ச்சலின் போது தொல்லை வரும். என தெரிந்தே பச்ச தண்ணி சாப்பிட்டேன் என்றாலும், குளிர் காய்ச்சலின் போது சுடுநீர் விருப்பம் இல்லாமல் சாப்பிடுகிறேன் என்றால் நிமிடம் தவறாமல் ஒரே நேரத்தில் தாக்கினால் CEDRON. சுடுநீரை விரும்பி சாப்பிட்டால் ARS. ஐஸ் வாட்டர் குடித்தால் சுகம் என்றால் PHOS. அசைவு கொடுத்தால் வயிறு வலி தணிவு என்றாலும் CHINA தான் மருந்து. குளிர் காய்ச்சலின் போதும், மற்ற வகை காய்ச்சலின் போதும், சரும நோயோ, வலிப்பு வகைகளோ, வேறு எந்த வகை தொல்லையாக இருந்தாலும், முறை வைத்து அதாவது அமாவாசை, பாட்டிம்மை, பௌணர்மி, வெய்யில் காலம், மழை காலம் என்று குறிப்பிட்ட காலத்தில் தோன்றும் முறை குணத்திற்கு இது முக்கிய மருந்து. மற்றும் குளிரின் போது பச்ச தண்ணீரை தான் குடிப்பார். குளிர் காய்ச்சலின் போதும், இரவு நேரத்திலும் போர்த்த மாட்டார். குளிக்கும் போது எனக்கு காய்ச்சல் வர போகுது என்று சொல்லி கொண்டே குளிப்பார். நான் அவதிபட போகிறேன், அவஸ்தை பட போகிறேன் என்று சொல்லி கொண்டே தப்பு செய்வார். உதடும், முகமும் சிவப்பு நிறமாக இருக்கும், காய்ச்சலின் போது வியர்வை இருக்கும். போர்வையை எடுக்க மாட்டமார். இது விசேஷமான குறி. இதே இடத்தில் சுடுநீர் குடித்தால் ARS. (அல்சரின் போது கஞ்சி குடித்தால் வயிறு வலிக்குது, ரொட்டி, கறி போன்ற கெட்டியான பொருளை தின்றால் சுகம் என்றால் IGN. காமாலையும் மலேரியாவும் கலந்த ஒரு நிலை. மாத விலக்கு அதிகமாக சென்று பால் அதிகமாக குழந்தைக்கு கொடுத்தது, விந்து சக்தி அதிகம், வெள்ளைபாடு அதிகம், இப்படி (உயிர் சக்தி) அதிகம் போன பிறகு மனம் மந்தமும், சோம்பலும், நீடித்த கவலையும், கலைப்புக்கு இது நல்ல மருந்து. ஒரு நாள் பசிக்கும். மறுநாள் பசிக்காது. ஒரு நாள் காய்ச்சல, மறு நாள் காய்ச்சல் இருக்காது, இப்படி அடுத்த, நாள் முறை வைத்து வரும் தொல்லைகளுக்கு, நோய்களுக்கு இது தான் மருந்து.