CAULOPHYLLUM - THA காலோபில்லம் த்ஹர்

மூலம்: அமெரிக்காவில் விளையக்கூடிய ஒருவகை தாவரம்.

அபார்சன் போதும், கற்ப காலத்தின் போது கரு கலைந்திடுமோனு பயம். பிரசவத்தைப் பற்றியே பயம். எதிர்பார்த்து பயந்து பாதி மன நோயாளி ஆகிவிடுவார். தான் கருவுற்ற மாதிரி நினைப்பு, மூன்றாவது மாதம் கரு கலைந்தாலும், அபார்சன்செய்த பிறகு மிகுந்த களைப்பு. ஏழு மாதத்திற்கு மேல் அடிவயிற்றில சுருக், சுருக்கென மங்குத்து (பொய் வலி.) வலிக்குது என்பார். பிரசவ வலி மாதிரி வலிக்குதுங்க என்றாலும், இது தான் மருந்து. பொய் வலியானது பிறப்பு உறுப்பில் இருந்து இடுப்புக்கு போய் விடும். உண்மை வலி என்பது இடுப்பிலிருந்து யோனிக்கு வரணும். இதை தான் கிராமத்தில் பிண்டம் வாயில் மாட்டி விட்டது என்பார். அப்ப அடிக்கடி முக்குவார்கள். மலம் தான போகும். பிரசவம் ஆகாது. உண்மை நிலை என்னவென்றால் கருப்பை விரியாது, ஆனால் யோனி மட்டும் விரிந்து இருக்கும். K-C யும் பார்த்துக் கொள்ளனும். கற்ப காலத்தில் கால், கை, வீங்கி விடும். மூட்டு வீங்கி விடும். கற்ப காலத்தில் நெற்றில் கருப்பு பட்டை போட்ட மாதிரி இருக்கும். இந்த ஓர் அடையாளத்தை வைத்து இதைக் கொடுத்தால் சிசரியனை தடுத்து விடலாம். கர்ப காலத்தில் மாதவிலக்கு, கை, கால், மூட்டுகளில் வலி ஏற்பட்டால், அபார்ஷனுக்கு பிறகு ஏற்படும் களைப்பு, இரவு 3 மணிக்கு அமைதியின்மை, சிறு மூட்டுகளில் வலி இழுக்கற மாதிரி, மெல்லற மாதிரி, வீங்கி போன மாதிரி இப்படி விரல் மூட்டிலும் காணப்படும். மணிக்கட்டில் வெட்ற மாதிரி வலிக்கும். இடைக்கால மாதவிலக்கின் போதும் கூட இப்படி ஊசி குத்தற மாதிரியும், பிற உறுப்புகளுக்கு தாவும். படுத்துக் கொண்டால் இப்படி வலி தாவும். கருப்பை சுண்டி விடுவதால் மாத விலக்கு மற்றும் வெள்ளைப்பாடு உற்பத்தியாகும். இதயத்தை வயிறு இழுப்பது போல இருக்கும். அதனால் மூச்சை இழுத்து, இழுத்து விடுவார்கள்.