THYROIDIN தைரோடின்

மூலம்: செம்மறி ஆட்டுக் குட்டியின் தைராய்டு சுரபியிலிருந்து எடுக்கப்பட்டது.

இம் மருந்துக்குரியவர்கள் தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள். கோபமாவே இருப்பார்கள். உடன் வருத்தமும் இருக்கும். உடனே இந்த மனநிலை மாறி ரொம்ப மகிழ்ச்சியாக இருப்பார்கள். பினாத்தல் இருக்கும். ஹலோபதி மருத்துவ முறையில் தைராக்சின் என தரப்படும் மருந்தின் முறிவுக்கு இது நல்ல மருந்து. திடீரென பைத்தியம், சித்த பிரம்பை பிடித்தது போல இருப்பார்கள். உடம்பும், மனமும், தைராய்டு உள்ள பகுதியிலும், பெருத்தும். உருவம் மாறி இருக்கும். இது போன்ற குறிகள் தோன்றுவதற்கு முன் மூன்று வருடமாக இந்த நோய் உள்ளே இருந்து நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டே வந்து திடீரெனத் தாக்கும். அதுவும், ரொம்ப கடுமையாக தாக்காமல் லேசாக தான் விட்டு, விட்டு தாக்கும். இரவில் பயமாகவே இருக்கும். அதைப்பற்றியே சிந்தித்து கொண்டிருப்பார்கள். நோயின் போதுக் கூட எடுத்தெறிந்து பேசுவார்கள். பணிவே இருக்காது.

இது போல் தைராய்டு சுரபிகளால் ஏற்படும் நோய்களுக்கு இது நல்ல மருந்து. இது பற்றி மேலும் விளக்கம் தேவை என்றால் ALLEN KEY NOTES ல் 352 பக்கம் பார்த்துக் கொள்ளவும்.