LILIUM – TIGRINUM லில்லியம் டிக்ரினம்
புலி மாதிரி நிறமுள்ள அல்லி மலர்.
ஒரே நேரத்தில் மூன்று, நான்கு வேலை செய்வான். பர, பரப்பினால் இதயத்துடிப்பு 120 முதல் 150 வரை இருக்கும். பல வேலை செய்வதால் குறிப்பிட்ட வயதுக்கு மேல் இதயம் தேய்ந்து விடும். வலி வந்தால் தாங்க முடியாது. எவ்வளவு நாள் வேண்டுமானாலும் எனது நோய்க்கு மருந்து சாப்பிடுகிறேன் என்று கூறுவார். உடன் BRY, CALC.தொழிலும், சரி தனது நோய்லும் சரி நாம் தேற மாட்டோம் என்று எண்ணுவார். நமக்கு உள் உறுப்பு கெட்டு இருக்குமோ. என்று எண்ணி, எண்ணி, அரை பைத்தியம் ஆகிவிடுவார். துறவியோ, சாமியாரோ, தவம் செய்யும் போது காம எண்ணம் மேலோங்கி நிற்கும். அப்போது தன்னையும் மீறி தப்பு செய்து விடுவோமா என்று பயப்படுவார்வார்கள். மனதை அடக்கியதால் பேசும் போதும் நினைக்கும் போது நிகழ்ச்சி மறந்து விடும். ஆனால் மற்ற நேரத்தில் ஞாபகம் வந்து விடும். ஒரே நேரத்தில் ஞாபகம் வந்து விடும். ஒரே நேரத்தில், இரண்டு உலகத்தில் இருப்பது போல் மாயமான ஓர் எண்ணம். காமத்தை அடக்க முடியாமல் தப்பு செய்யும் சாமியார்கள் இவர்களே. தான் போட்டுச்செல்லும் செருப்பு கழண்டு போவதே தெரியாது. இந்த மாதிரி உள்ளவர்களுக்கு இம் மருந்து பொருந்தும். உதாரணம் :- ஒருவர் ஒரு காலில் மட்டும் இரப்பர் செருப்பு அணிந்து கொண்டு கிளினிக் வந்தார். என்னப்பா ஒரு காலில் செருப்பு இல்லையே என்று கேட்டதற்கு, அட ஆமாங்க செருப்பு கழண்டதே எனக்கு தெரியலை என்றார். இது குஷ்ட நோயாளிக்கு பொருந்துமா? தற்கொலை விருப்பம்.
அரை பைத்தியம். இவர்களுக்கு தற்கொலை செய்து கொள்ள விருப்பம். இதய நோய், தொழில் தேற மாட்டோம் என்ற எண்ணம். அவசரம், பயம், தப்பு செய்திடுவோமோனு பயம். கவலையை தேடி பிடித்து பயப்படுதல். வலி தாங்க முடியாது. சினிமா, தமாஷ் பார்க்க விருப்பம். நோய் குறைவு. காமம் மிகுதி, மறதியில் பொருளை மறந்து விடுதல். சூடு, குளிர்ச்சி தெரியாது. இரண்டு உருவமாக தெரியுது. வழக்கமானது தெரியாது. மனதில் அமைதியின்மை. இதயம் கட்டி இழுப்பது போல் ஓர் எண்ணம்.