LATHYRUSUVDIYA லாதிரிஸ்சுவடியர்
மூலம்: கோழிக் குஞ்சும், பட்டாணியும் சேர்ந்தது (சந்தேகம்).
கீழ் பக்கவாதம் அதாவது காலை தாக்கும் பக்க வாதத்திற்கு இது நல்ல மருந்து. இந்த நோயில் நரம்பு திண்டு மற்றும் உள்ளுருப்புகளைத் தாக்கும். இவர்களுக்கு அதிகமான வலி இருக்கும். உள் பக்கமாக இழுப்பது போன்ற வலியிருக்கும். நரம்பு சத்து குறைவாக இருக்கும். (பெரி பெரி ) இது பெரும்பாலும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தான் இந்த பக்கவாதம் தாக்கும். இதற்கு தான் இளம் பிள்ளை வாதம் என்று பெயர். இடுப்புக்கு கீழே வாதம் காணப்படும். நுரையீரல் சம்மந்தமான நோய்கள் தாக்கும். இந்த பக்க வாதத்தினால் நரம்பு சம்மந்தமான பல தொல்லைகள் வரும். Dr.S.V.D.செல்லம் அவர்;கள் இளம் பிள்ளை வாதம் உள்ள குழந்தைகளுக்கு குறி மருந்தும் இடையில் இம் மருந்தும் தருவார். கொடுத்தே ஆகனும் என்றும் கூறுவார். இளம் பிள்ளை வாத தடுப்பு மருந்தாக தற்காலத்தில் ஊசி போடுகிறார்கள் அதற்;கு பதிலாக இம் மருந்தை தரலாம். மனம் மந்தமாகவே இருக்கும். மேல் வயிற்றிலும் மந்தமாக இருக்கும். இதையே அடிக்கடி பைத்தியம் மாதிரி சொல்லி கொண்டிருப்பார்;. நின்று கொண்டிருக்கும் போது திடீர்ன்னு கண்ணை கட்டி மயக்கம் வந்திடுந்துங்க என்பார். நரம்பு பலஹீனம் தான் அதற்கு காரணம், வாயில் எரிச்சல், நாக்கில் கிச்சு, கிச்சு செய்வது போலவும், நாக்கில் ஊறுவது போலவும், மருத்து போய்யும் இருக்கும். உதடு வெந்தது போல இருக்கும். கைக் கால்கள் நுனியில் மருத்து போய் இருக்கும், உடன் நடுக்கலும், பிறகு கால்கள் உதறும். ரொம்ப தளர்ந்தும் அப்படியே இருக்கும். கெண்டைக் கால் Nப்பிய மாதிரியிருக்கும், அதனால் நடக்க முடியாது. குழந்தைகளுக்கு குளிர்ச்சிபட்டால் தொல்லை, ஆனால் பாதமும் ஜில்லுனு ஆகிவிடும். சப்பளங் கால் போட்டு கூட உட்கார முடியாது குழந்தைகளால். அங்கங்கு வட்டமாக மருத்தும், இழுக்கும். இந்த குறிகள் பக்க வாதத்தில் நன்றாகத் தெரியும். இடுப்புக்கு கீழே கெட்டியான தசைகள் தளர்ந்தும், இளைத்தும் காணப்படும். (இளம் பிள்ளை வாதத்தில் இதைப் பார்க்கலாம். ) கால்கள் நீலநிறமாகவும், சில இடங்களில் பெருத்தும் காணப்படும். உட்கார்ந்திருக்கும் போது முழங்கால் மூட்டு பெருவிரல் போன்றவை தரையில் மோதாமல் மேலே தூக்கிக்கிட்டு இருக்கும். குதிங்கால் கூட தரையில் மோதாது. இவர்கள் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தால் வளைந்த மாதிரி (பெண்டாக) உட்கார்ந்திருப்பார்கள். பித்தப்பை தளர்ச்சியினால் அடிக்கடி சிறுநீர் தானாகவே கசியும். உடலுக்குள்ளே ஜில்லுனு இருக்கும்.
உறவு மருந்துகள் :- SECALE, OXYTROP.