LAC - VACCINUM லாக் வக்சினம்

மூலம்: பசுவின் பால்.

இம் மருந்துகாரர்கள், நரம்பு பலஹீனத்தால் தன்னால், எதுவும் செய்ய முடியவில்லையே, சக்தி குறைவாக இருக்கிறது என்ற எண்ணம். இதனால் தாழ்வு மனப்பான்மை. இவர்களுக்கு எந்த வார்த்தையைக் கேட்டாலும், அது கெட்ட செய்தியாகவே கேட்கும். குழப்பமான மனநிலை உள்ளவர். அதனால் அதிக நேரம் யோசித்தப் பிறகு ஒரு செயலை செய்வார்கள். எந்த ஒரு செய்திiயும், சொல்லவும் முடியாது, மற்றும் எழுதவும் முடியாது. காரணம் அந்த தாழ்வு மனப்பான்மைத் தான். இது பெரும்பாலும், பெண்களிடம் காணப்படும். தலை பாரத்தினால் கிரு, கிருப்பாக இருக்குது என்று கூறி, குப்புற படுத்திருக்கும் பெண்களுக்கு இது. வலது கண் மந்தமாக இருப்பதாகவும் உடனே இடது கண் ரொம்ப டல்லாக இருப்பதாகவும் கூறுவார்கள். காதை ஏதோ கடிச்சிகிட்டு இருப்பது போலவும், ஏதோ காதின் மீது மூடியிருப்பதாகவும், பெண்கள் கூறுவார்கள். காதடைப்பும் இருக்கும், பக்கத்திலே, யாரோ பேசுவது போலவும் இருக்கும். வாய் மஞ்சள் நிறமாக இருக்கும். அழுக்கு பிடித்ததுப் போல் நாக்கின் மீது ஏதோ திரை போட்ட மாதிரி வட்ட வட்டமாக இருக்குது என்றும், புளிப்பு சுவை தெரியுது என்றும் கூறுவார்கள். வாயின் இரு ஓரங்களிலும் ஆசிட் போல் காரமாகவும், மஞ்சள் நிறமாகவும், ஒழுகும் இதை அடிக்கடி துணியைக் கொண்டுத் துடைப்பார்கள். நாக்கின் மீது வட்ட, வட்டமாக இருக்கும். அதில் இரணமாட்டம் வலியும், வெள்ளை நிறமான குழிப்புண்ணும் இருக்கும். நாக்கு வீங்கி அதில் தோல் உறிவது போன்ற உணர்வும் இருக்கும். நாக்கின் மீது சீதம், பசை தடவியது போல இருக்கும். அதில் இருந்து நாராட்டம் வரும், இந்த இடத்தில் புண் இருக்காது. மூச்சுக் காற்று, சீழ் நாற்றத்துடன் வரும்.

புளிச்சிப் போன வாடையும் இருக்கும். உள் கன்னம் பகுதியிலும், டான்சில் பகுதியிலும் விழுங்கும் போது வலி. குரல் வளையை அடைத்த மாதிரி ஓர் உணர்வு. மாலையில் தாகம். விருப்பத்தினால் மூன்று கிளாஸ் தண்ணீர் குடிக்கிறேன் என்று கூறுவார்கள். தாகம் ஏற்படும் போது குளிர்ச்சியான நீரை அளவாக சாப்பிடுவார்கள். வயிறு வீங்கியும், உப்பியும் இருக்கும். காலை 10.30 மணி வரைக்கும். அப்போது, வாயில் புளிப்பு சுவைத் தெரியும். உடன் குமட்டல் ஒரு மணி நேரம் வாந்தி வர மாதிரியே இருக்கும். ஆனால் வராது. எதுக் கழிப்பும் இருக்கும். வலி பரவிக் கிட்டே வந்து தொப்புளுக்கு மேலே ஒரு இஞ்சில் வலியிருக்கும். மலக் காற்று தொல்லை இருந்து கொண்டே இருக்கும். இதனால் சித்ரவதை செய்வது போல் இருக்கும். சாப்பாடோ, பாலோ சாப்பிட்டு ஒரு மணி நேரத்திற்கு பிறகு, இப்படி சித்ரவதை செய்வது போல இருக்கும். வயிறு உப்பிக் கொண்டு பொர, பொரணு சப்தம் கேட்கும். இவர்களது மலம் பெரிய உருண்டையாக இருக்கும். அறுந்து விழாது. மலத்தின் மீது வரி, வரியாக இருக்கும். ரொம்ப முக்கனும். மலக் காற்று அதிக சப்தத்துடன், அதிக நேரம் விட்டால் தான் வயிறு நல்லாயிருக்கும். வெள்ளைப்பாடு தண்ணியாட்டம், வெள்ளை நிறத்தில் வரும். சேக்ரல் பகுதியில் வலி இருக்கும். மாத விலக்கின் போது ஒரு டம்ளர் தண்ணீர் சாப்பிட்டாலும், மாதவிடாய் அடுத்த மாதம் வரை வராது என்று கூறுவார்கள். திடீரென மாதவிலக்கு நின்று விடும். அதனால் அடி வயிற்றை தூக்கி பிடித்துக் கொள்வார்கள். குளிர்ச்சியான கையால் அழுத்திப் பிடிப்பார்கள். கர்பக் காலத்தில ஏற்படும். குமட்டலின் போது, பால் குடித்தால் சுகம். குமட்டல் குறையும். தொண்டை குரல் வளையில் ஏதோ பந்தாட்டம் அடைச்சிருக்கு, அதனால் சுவாசிக்க முடியலை என்றுக் கூறுவார்கள். கால் பகுதியில் ஈட்டியில் குத்துவது போல வலியும், சலீர், சலீர் என ஓடுவது போலவும் வலி. இடுப்பு மூட்டுகளில் வலி இருக்காது. சின்ன, சின்ன வாத வலிகள் ஏற்படும். இவர்களது சருமத்தில் பட்டை, பட்டையாகவும் அதில் கீரிஸ் தடவியது போலவும் இருக்கும். வாயின் ஓரத்தில் புண் ஏற்பட்டு முருடு தட்டி விடும். அதை பேத்து, பேத்து எடுப்பார்கள். வெண்ணெய் தடவியது போலவும் இருக்கும். இவர்களுக்கு வலியானது மார்பு, அடிவயிறு, இடுப்பு மற்றும் முழங்காலில் ஏற்படும். ஒரே நேரத்தில் வலது மற்றும் இடது பகுதியில் வலி ஏற்படும்.