KALI - BROMATUM காலி புரோமாட்டம்

பொட்டாஸியத்தின் இது ஒரு பிரிவு.

இம் மருந்துக்குரியவர்கள் எதையும் யோசிக்காத மனம். காரணம் யோசிக்க முடியாத அளவு பலஹீனம். அவ்வளவு ஞாபக மறதி. வாழ்க்கையிலும், நோயிலும் இனி மேல் என்னால் தாங்க முடியாதுங்க, தாக்கு பிடிக்க முடியாது என்று கூறினாலும் K-BR.. இந்த மருந்தை கொடுத்த பிறகு ஞாபகமும், நோய், வலி தாங்க முடியலை என்ற உணர்வும் சரியாகி விடும். பிறகு நாம் வேற குறியை பார்த்து மருந்து தரலாம். இதனுடன் ஏக்கம் இருந்தால் IGN. பொருந்தும். என்னைக் கடவுள் தண்டித்து விட்டார் என்றாலும், என் உடம்பில் கடவுள் இருக்குது, என் நாக்கில் ஆத்தா குடியிருக்கிறாள், ஆத்தா என் கூட பேசுகிறாள் என்றாலும் K-BR. பகலில் கூட எனக்கு கடவுள் தெரியுது என்று கூறுவார் HEP-SUL பொருந்தும். எனக்கு தலைவலி நான் என்ன செய்ய முடியும் என்றாலும், மிகப் பெரிய சோகம் ஏக்கம் IGN, N-M. ஏக்கம், ஏக்கத்தில் அப்படியே ஸ்தம்பித்து உட்கார்ந்துக் கொள்வார். பேசிக் கொண்டிருக்கும் போது பாதியிலேயே மறதி. பொய்யுணர்ச்சி, எதிர்பார்ப்பு, பயம், ஏதேனும் நடந்திடுமோ என்று பயம் CALC - மாதிரி. மனப்பிரம்மை, பித்து, பேய் பிடித்தவர்களுக்கு நல்ல மருந்து. விதிப்படி, சட்டப்படி தான் நடக்கும் என்ற வார்த்தையை பயன்படுத்துவார் K-BR. கையை சும்மா வைத்திருக்காமல் அதையும், இதையும் கில்லிப் போட்டுக் கொண்டேயிருப்பார்கள். கை, வயிறு, கால் இப்படி உடம்பு குண்டு என்பார்கள். தன்னை திருடன் என்று சொல்வார்கள். (DELU- - மாயம்). மிகுந்த காமம், நெருங்கிய உறவினர் இழப்பினால், பித்து பிடித்து போய் விடும், காமவெறி தீர்த்து கொள்ள முடியவில்லையென்றால் அப்படியே ஸ்தம்பித்து போய்விடுவாள். காமத்தில் இவர்கள் உறவு கொண்டாலும், திருப்தியே ஏற்படாது. அதனால் பேய் பிடித்து விட்டது என்று கூறுவார்களே அவர்கள் இவர்கள் தான், தன்னை திருப்தி படுத்தாத ஆண் இனத்தையே வெறுப்பார்கள். அதை வெளியே சொல்ல மாட்டார்கள். ஆனால் வெறுப்பானது இருக்கும். என்னிடம் காளி பிடித்து இருக்குது, காட்டேறி பிடித்து இருக்குது, துஷ்ட தேவதை பிடித்து இருக்குது என்பார். அந்த உணர்வை, தீர்த்து கொள்வதற்க சாமி ஆடுவதும், தலையில் குடம், குடம்மாக தண்ணியை ஊற்றி கொள்வதும், எலும்பிச்சை பழம், கற்பூரம் சாப்பிடுதல், எனக்கு காவு கொடுங்கடா, கும்புடுங்கடா என்று எல்லோரையும் பேசுவார்கள். சாமி சொல்லுபவர், குறி சொல்லுபவர்கள் இவர்கள் தான். ஆனால் இம் மருந்தின் குறியை பார்த்துக் கொள்ளனும். இழப்புக்கு இது தான் பெரிய மருந்து. அமாவாசை;கு முதல் நாள், பௌர்ணமிக்கு முதல் நாள் தோன்றும் காக்கை வலிப்புக்கும், மற்ற தொல்லைகளை அந்த காலத்தில் கூறினால் இது தான் மருந்து. ஆண் தன்மையே இருக்காது.