KALI- MURIATICUM காலி முரியாட்டிக்கம்

மூலம்: பொட்டாஸியத்தில் உள்ள உப்பு.

இம் மருந்துக் காரர்களுக்கு ஆண் தன்மை குறைவு. பட்டினி கிடக்க விரும்புதல், எப்போதும் மனச்சோர்வு, செக்ஸில் பலமுண்டு. ஆனால் இவர்களுக்கு விருப்பமில்லை. வெள்ளைபாடு சளி, பால்நிறமாக வெளியேறும். மஞ்சள் நுரைபோல் வெள்ளைபாடு. இவர்களுக்கு மூட்டு வலியிருக்கும். கோபமே இருக்காது. இடுப்பிலிருந்து பாதம் வரை மின்னல், மின்னுவது போல மேல் நோக்கி வலி. மந்தம், கவலை, பயம் இது தான் இதனுடைய முக்கிய குறி. கோளத்தில் மின்னல் போல் வலி என்றால் ; PHYT.. கொழுப்பு, புளிப்பு சாப்பிட்டு ஜீரணம் ஆகவில்லை என்பார். இங்கு K-C குறிகள் உள்ளதா பார்த்துகனும். காரணம் இதில் K-C குறிகள் நிறைய இருக்குது. ஆகவே பார்த்துக் கொள்ள வேண்டும். தனிமை பயம் யாராவது இருந்தால் அமைதியாக இருப்பார். இதே இடத்தில் உடன் இருப்பவரை தொல்லைப்படுத்தினால் K-C சாதுவான, கோபமே வராத குழந்தைகளுக்கு, தான் அழகில்லை என்ற எண்ணம், புரிந்து கொள்வதில் தாமதம், அதிக உணர்ச்சி வசப்படுதல், தீடீர் என்று தோன்றும் சின்னம்மை, பெரியம்மை போன்ற அம்மை வகைகள், தொண்டை அடைப்பான், வாத நோய், இடுப்பு மூட்டில் வலி, மூட்டுகளெல்லாம் வீங்கி போய் விடுதல், சுளுக்கு விழுதல், நடக்க முடியாமல் போய் விடுல், சரும நோய் களிம்பு தடவி குணமான பிறகு தோன்றும் காக்கை வலிப்பு, நெருப்பில் சுட்ட மாதிரி தோன்றும் கொப்புளம், கொழுப்பு போன்ற ஜீரணமாகாத உணவு வகைகளை சாப்பிடுவார்கள். நாக்கைப் பார்த்தால், பாலாடை மாதிரி தடித்த, மினு, மினுப்பான சளி ஒட்டி கொண்டு இருக்கும். அதை காரி, காரி துப்புவார். ஆனால் அது வராமல் ஒட்டிக் கொண்டேயிருக்கும். பச்ச தண்ணி குடித்தால் தொல்லை என்றும் கூறுவார். சுகம் என்றும் கூறுவார். திடீர் என்று தோன்றும். மேலே கண்ட நோய்களுக்கு இது பொருந்தும். டாக்டர், எழுத்தாளர், மன போராட்டங்களுக்கு பிறகு நரம்பு பலஹீனம் ஏற்படும்.