INSULIN இன்சுலின்

இக்காலத்தில் சர்க்கரை வியாதிக்கென இம் மருந்தை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அவர்களுக்கு இது பயன்படும். உடலில் உள்ள (பாங்கரியாஸ்) கணையம் என்ற சுரபி உடலுக்கு இன்சுலீன் என்ற திரவத்தை வெளியிடுகிறது. சக்கரை நோயளிகளுக்கு இதிலிருந்து சுரக்கின்ற நீர் (இன்சுலீன்) குறைவதால் சர்க்கரை (SUGAR) நோய் ஏற்படுகிறது. அதனால் INSULIN. என்ற மருந்தை அதிகமாக பயன்படுத்துவதால் அந்த மருந்தை முறிப்பதற்காக ஹோமியோபதியில் இந்த மருந்து பயன்படுகிறது. இன்சுலீனை அதிகமாகப் பயன்படுத்துவதால் இதயம், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை கெட்டு விடுகின்றன. மேலும் குடல்களில் புண் ஏற்படுதல், அரிப்பு ஏற்படுதல், பசி அதிகமாகுதல் மற்றும் குறைதல், மூட்டு வலிகள் இது போன்றவைகளை ஏற்படுத்தும். இதை முறிக்க INSULIN –ஐ மூன்று வீரியத்திலிருந்து முப்பது வீரியம் வரை தினம் மூன்று வேளைக் கூட தரலாம். நோயின் அளவைப் பொருத்தே வீரியமும் அளவும் பயன்படுத்த வேண்டும்.