GAMBOGIA காம்போஜியம்

மூலம்: குடல் பகுதி.

இதன் முக்கிய குறி என்னவென்றால் மலம் கழிக்க உட்கார்ந்த பிறகு கொஞ்ச நேரம் கழித்து முக்கிய பிறகு மலம் சர்ன்னு பீச்சியடிக்கும். இது அடிக்கடி தேவைப்படாத மருந்து தான். உட்கார்ந்தவுடன் (அ) குனியும் போதே பீச்சியடித்தால் CROT-T. மருந்தாகும். நாம் பொறுமையாக உற்று கேட்டால் எந்த மருந்துக்குரியவர் நோயாளி என்று தெரிந்து விடும். மருந்து மாறிவிட்டால் வேலை செய்யாது. மலம் அவசரம், வேகம், பேதி பீச்சியடிக்கும். சர்ருன்னு CROT –TIG. மலம் உட்கார்ந்த பின்பு மெதுவாக முக்கிய பிறகு பேதியில் சர்ன்னு பீச்சியடித்தால் GAMB. இவ்வளவு தான் வேகமா? அது மெதுவாகவா? இது தான் வேறுபாடு ஆகும். இம் மருந்து பெரும்பாலும் வயதானவர்களுக்கு பயன்படும். பேதி தண்ணி மாதிரி அடிக்குது என்றும், வாயு தொல்லை, உப்பிசம் காற்று பிரியுது என்ற தொல்லைகளும், தலை கணமாயிருக்குது என்ற தொல்லைகளும், தலை கணமாகயிருக்குது, கண் பார்க்க முடியலை விரைச்சுகிச்சு என்ற தொல்லைகளையே பெரும்பாலும் கூறுவார்கள். பல் ஓரங்களில் ரொம்ப உறுத்துது, என்றும், எரிச்சல், அறுப்பது போலவும் இருக்கும். அப்போது தொண்டை, நாக்கு வறண்டு விடும். சாப்பிட்டவுடன் வயிறு வலி, மலம் கழிந்தப் பிறகு காற்றுப் பிரியுது. வயிறு உள்ளையே உறுளுது என்று கூறுவார்கள். சீத கடுப்பில் இப்படி ஏற்படும். சேக்ரலில் திடீரென வலி ஏற்பட்டாலும் மேலே கண்ட தொல்லைகள் ஏற்படும். உறவு மருந்துகள்் ALOSE – PODO kw;Wk; PULS, CROTON – TIG.

GELSEMIUM – SEMPERVIRENS - ஜெல்சிமியம் செம்ப்ர்வைன்ஸ்

மஞ்சள் நிறமுள்ள மல்லிகை பூ.

மெத்தைப் படி, இராட்டினம், மலை ஏறும் போது பயம். அம்மாவை கட்டிப்பிடித்து கொள்ளும் சிறுவர்கள். உடம்பு கணமாக இருக்குது அதனால் படுக்கிறேன் என்பார். கடந்த காலத்தில் செல்வ செழிப்பும், மகிழ்ச்சியையும் நோயின் போது (இப்ப) கூறி கொண்டிருந்தால் உடன் COFF. எதிரில்; உள்ள பொருளோ, மனிதர்களோ இரண்டு, இரண்டாக தெரிந்தாலும் இது. இதயதுடிப்பு 3 வது, 5வது துடிப்பில் நின்று, நின்று துடிக்கும். சிறுநீர் போனால் சுகமாக இருக்குது என்பார். ஆனால் எழுந்திருக்கவே முடியாது. அதிக கூச்சத்தினாலும், பயத்தினாலும் விழுந்தே கிடப்பார். பெரியவர் முன்னாடி பேசுவதற்கு நடுங்கினாலும், கூச்சத்தினாலும், பயத்தினாலும் விழுந்தே கிடப்பார். பெரியவர் முன்னாடி பேசுவதற்கு நடுங்கினாலும், கூட்டத்தில் பேச எழுந்து நின்றதும் நடுக்கல் வந்துவிடும். குளிருக்கு, குப்பைகளை போட்டு எரித்து குளிர் காய்வார். இதய வியாதியின் போது மட்டும் அசைந்தால் சுகம். (இங்கு கஷ்டம் என்றால் DIG ஆகும்.) உடம்பு கரைந்தால் IOD. நிமிர்ந்து உட்கார்ந்தால் வயிறு வலி அதிகம் என்பார். பிறர் சண்டையை இவர் பார்த்தால் இவரது கை, கால், நடுக்கல் எடுத்து விடும். சோம்பல் வெளியில் எங்கும் போக முடியலை என்பார்கள். சிறுநீர் கழிக்க ஓடுவார். ஓடிய பிறகு கழிப்பார். இதயம் நின்று போகும் என்று பயந்தால் LOBIELIA. இரும்பு வலைக்குள் வைத்து நசுக்குவது போல் இருந்தால் CACT, LACH. உடம்பு வலியினால் படுக்கிறேன் என்றால் BRY. மரமாட்டம் இருக்குது அதனால் படுக்கிறேன் என்றால் N-M. சூடு வேணும் அதனால் அடுப்பையே கட்டிப் பிடித்துக் கொண்டால் N-M, GELS, BELL.. தலையை ஆட்டி பதில் சொன்னால் LYC, PULS, SULPH.குளிரில் தலையை முழுக்க, முழுக்க ஆட்டினால் GELS. ஊருக்கு போக எண்ணும் போதே பயத்தில் மலம் கழிய பாத்ரூம் போயிட்டு போயிட்டு வருவார்கள். தன்னை யாரோ இழுப்பது போல் எண்ணம். குறிப்பு:- உடம்பு கணத்தினால் அசையாமல் படுத்தே இருப்பார். இது தான் முக்கிய குறி. இருதய வியாதின் போது மட்டும் அசைந்து கொண்டே இருப்பார். இது தான் இம் மருந்தின் (இருதய வியாதின்) முக்கிய குறி.