AMYLENUM – NITROSUM அமிலினம் நைட்ரோஸம்

மூலம்: அமில் என்ற திராவகமும், இராஜ திராவகமும் கலந்த கலவை.

இது பெரும்பாலும் இளம்பெண்களுக்கு தற்காலத்தில் முக்கியமாக தேவைப்படும் மருந்துகளில் இதுவும் ஒன்று. அடிக்கடி மாதவிலக்கை தள்ளி போக செய்ய வேண்டும் என்பதற்காக மாதவிலக்கை நிறுத்த மாத்திரைகளை அடிக்கடி சாப்பிட்டதாலும், கருப்பையின் இயக்கங்கள் மழுங்கி வலியில்லாமல் போய்விடும். இந்த வலியானது இருதயத்திற்கு சென்று நாடிதுடிப்பை அதிகப்படுத்தி அதனால் இதயம் பலஹீனப்பட்டு பின்பு மெதுவாக துடிக்கும். மேலும், உள் உறுப்புகளை வெட்டி எடுத்த பின்பும் இந்த நிலை வரலாம். முகத்தில் இரத்தம் தேங்கி கொண்டால் BELL,GLON. இவர்களுக்கு பிராணவாயு பற்றாக்குறை ஏற்படும். அதனால் இரவு படுத்திருக்கும்போது திக்குன்னு எழுந்து திறந்த வெளி காற்றுக்கு ஓடுவார்கள். இவரது ஒற்றை தலைவலியானது கீழே இறங்கி, காலர் எலும்பு வரை பரவி நிற்கும். இதய துடிப்பானது இவர்களுக்கு கூக்குரல் போடுவது போல துடிக்கும். முகம், வயிறு, மார்பு, முதுகு போன்ற உடல் பகுதிகளில் வியர்வை கொட்டும். எதிர்பார்ப்பு நமக்கு யாராவது உதவி செய்ய மாட்டார்களா, பாத்ரூமுக்கு நம்மை பிடித்து கொண்டு போகமாட்டார்களா என்றும், இதுபோன்ற உதவிகளை எதிர்பார்ப்பார்கள். பெண்ணுக்கு இல்லற நினைப்பு வந்தவுடன் வாய்ப்பு கிடைக்கும் வரை தாங்கமாட்டாள். காமம் மிகுதியாகி விரல்களை கொண்டோ, வேறு எதையாவது கொண்டோ, உதடுகளை தேய்த்து, தேய்த்து இன்பத்தைப் பெற்று கொள்ளுவாள். இப்படி அடிக்கடி செய்வதால் ஜீவ சக்தி நீர் செலவழிந்து உண்மையான உடலுறவு கொள்ள முடியாது, நோயாளியும் ஆகி விடுவார். குறிப்பு :- இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இளம் விமானிகள் போர்காலத்தில் போர் நேரத்தில் மாதவிலக்கு தோற்றினால் வேலை பாதிக்குமே, அப்போது மாதவிலக்கை நிறுத்தலாம் என்று கண்டுபிடிக்கபட்டது தான் இப்போது இருக்கும் ஹலோபதி மருந்துகள். ஆனால் இப்போது இருக்கும் பெண்கள் ஊருக்கு போவதற்கும், கோவில், விரதம், பண்டிகை, திருமணம், எங்க வீட்டுகாரர், மகன், ஐயப்பன் மலைக்கு போகிறார்கள் சமையல் செய்ய வேண்டும். அதனால் மாத்திரை சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு, அதன் பின் தோன்றும் இருதய வியாதிகளுக்கு இதுதான் மருந்து. சித்தாவிலும் இதே போல கருப்பையை கெடுத்துக்கொண்ட பிறகு ஏற்படும் இருதய வியாதிகளுக்கு இது தான் மருந்து. ஆகவே நாம் பொருளாதாரம், நாடு பிடிக்கும் ஆசை, உயர்ந்த பதவி, மேல் பதவி பிடிக்க வேண்டும் என்பதற்க்காக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசைக்காக நாசமடைகிறோம் என்பதை உணர வேண்டும்.