AGARICUS- MUSCARIUS அகாரிகஸ் மஸ்காரிஸ்
மூலம்: வறண்ட நிலத்தில் விளையும் ஒரு வகை காளான்.
ஜிலு, ஜிலுன்னு ஐஸ் ஊசி ஏறுகிற மாதிரி விரு, விருன்னு மேலே ஏறும். விஷக்கடிகள் எது கடித்தாலும் மேலே ஏறி கீழே இறங்குது என்றால் இது. மேலே ஏறுது என்றால் KALMIA. அதிக கவலை, பயம், ஏக்கம், நோய், குரக்களைக்குப் பிறகு இந்தக் கட்டம் வரலாம். மற்றும் செல்லமான நாய், பூனைக் கடித்தாலும், பூனை நாய், பசு போன்றவற்றின் மீது மிகவும் அன்புக்கொண்டவர்களுக்கும் இது தான் மருந்து. தத்துவஞானி கிருஷ்ணமூர்த்திக்கு எடுத்த குறி ANIMAL LOVES. இது தான் மருந்து. இந்த மருந்தைக் கொடுத்து சுகம். (கருப்பை எடுத்த பின்பு வெள்ளை படுது என்றால் ALLIUM CEPA. அதாவது ஒரு நோயாளி கூறினார். காலை எடுத்த பின்பு அந்த காலில் வலிக்குது என்றார். இதை கொடுத்து சுகம்.) அதனால் அவர் கூறுவதை நம்பி மருந்தை தேடு கிடைக்கும். அது தான் ஹோமியோபதியாகும். ஜிலு, ஜிலுன்னு ஐஸ்ஸில் செய்த ஊசி மாதிரி குத்திக்கிட்டு மேலே ஏறுது, பிறகு கீழே இறங்குது இப்படி வலியானது ஜிலு, ஜிலுனு மேலே ஏறுவதும், கீழே இறங்குவதும் என்றால் ஒரே மருந்து இது தான். இப்படி தேகத்தில் எந்த பகுதியிலாவது, கண், காது, மூக்கு, நரம்பு, எலும்பு, கருப்பை, இப்படி எங்கு வேண்டுமானாலும் இப்படி கூறி இம்மருந்தின் குறி வந்தால் ஒரே மருந்து இது தான்.